Saturday, November 17, 2012

http://nkrtcr.blogspot.in

திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம்
*** www.fb.com/thirumarai
மங்கள வாழ்த்து 
------------------------
கல்லால் நிழல் மலைவு இல்லார் அருளிய
பொல்லார் இணை மலர் நல்லார் புனைவரே

கல் ஆல மரத்தின் நிழலில் ஏழுந்து அருள் செய்து ஐயங்கள் தீர்த்து அருள் புரிந்த முதல் ஆசிரியர் சிவன். பொல்லாத பிள்ளையாருடைய ஞானசத்தி கிரியாசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர் இக்கருத்துக்களை எடுத்து தருகிறார்.
-------------------------------------------------------------------------------------------------
முதல் சூத்திரம்
------------------------
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

அவன் =சதா சிவம்; அவள்=சக்தி; அது=மாயா
இவை மூன்றின் இயக்கமே..

இரண்டாம் சூத்திரம்
------------------------
அவையே தானே ஆய், இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே

மூன்றாம் சூத்திரம்.
------------------------
உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

நான்காம் சூத்திரம்
------------------------
அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே

ஐந்தாம் சூத்திரம்
------------------------
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே

ஆறாம் சூத்திரம்
------------------------
உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே

ஏழாம் சூத்திரம்
------------------------
யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
சத்தே யறியாது அசத்துஇலது அறியா
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா

எட்டாம் சூத்திரம்
------------------------
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

ஒன்பதாம் சூத்திரம்
------------------------
ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே

பத்தாம் சூத்திரம்
------------------------
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

பதினொன்றாம் சூத்திரம்
------------------------
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே

பன்னிரண்டாம் சூத்திரம்
------------------------
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே
-----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment